TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-02-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-02-2026
தேசியச் செய்திகள்
புதிய வருமான வரிச் சட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் அமல்
புதிய வருமான வரிச் சட்டம் 2025 எளிமைப்படுத்தப்பட்ட விதிகளுடன் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்; இச்சட்டத்தின் கீழ் வருமான வரித் தாக்கலில் பொய்க் கணக்கு காட்டினால் 100% அபராதம் விதிக்கப்படும் என்றும், வரி தொடர்பான சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை இன்றி அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட் 2026–27-ஐ தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026–27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 9-ஆவது முறையாக தாக்கல் செய்தார்; இந்த பட்ஜெட் நிலையான பொருளாதார வளர்ச்சி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது; வருமான வரி தொடர்பாக வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான வருமான வரி தாக்கல் கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, வரி சார்ந்த சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை இன்றி அபராதம் மட்டும் விதிக்கப்படும், தாராளமயமாக்கப்பட்ட பணி பரிவர்த்தனைத் திட்டம் (LRS) கீழ் வெளிநாட்டு கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான TCS 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது; குறைந்த அளவு வரி செலுத்தும் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்காக 6 மாதங்கள் ஒருமுறை வெளிநாட்டு சொத்துகள் அறிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; இந்தியாவில் திரவ மையங்களை அமைக்கும் உலகளாவிய சேவை நிறுவனங்களுக்கு 2047 வரை வரிவிலக்கு, பங்கு பரிவர்த்தனை வரி (STT) 150% வரை உயர்வு, தனிநபர் இறக்குமதிகளுக்கான சுங்கவரி 20% இலிருந்து 10% ஆகக் குறைப்பு, 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு, மேலும் 2026–27 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை GDP-யின் 4.3% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2026–27 ரூ.53.47 லட்சம் கோடி மதிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026–27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை ரூ.53.47 லட்சம் கோடி மதிப்பில் தாக்கல் செய்தார்; இது 2025–26 பட்ஜெட் மதிப்பீட்டான ரூ.49.64 லட்சம் கோடியை விட 7.7% அதிகம் ஆகும், மேலும் 2024–25 பட்ஜெட் ரூ.46.52 லட்சம் கோடியாக இருந்தது; 2026–27 இல் கடன் அல்லாத வருவாய் ரூ.36.5 லட்சம் கோடியாகவும், மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.7 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், பொது உள்கட்டமைப்புக்கான மூலதன செலவீனம் ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது, இது 2014 ஆம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடியாகவும், கடந்த ஆண்டு ரூ.11.2 லட்சம் கோடியாகவும் இருந்தது; ரூ.17.2 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த நிதியாண்டில் சந்தைகளில் இருந்து ரூ.17.2 லட்சம் கோடி கடன் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதில் நீண்டகால பத்திரங்கள் மூலம் ரூ.11.7 லட்சம் கோடி பெறப்படும், மேலும் சிறு சேமிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் பயன்படுத்தப்படும்; நடப்பு நிதியாண்டில் ஜிடிபி அடிப்படையில் நிதிப் பற்றாக்குறை 4.4% என்றும், 2026–27 இல் 4.3% என்றும் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2026–27 ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி ரூ.393 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது, இது நடப்பு ஆண்டின் முன்கூட்டிய கணிப்பான ரூ.357 லட்சம் கோடியை விட 10% அதிகம் ஆகும்.
2035 வரை அடிப்படை சுங்க வரி விலக்கு நீட்டிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் மூலம், அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அடிப்படை சுங்க வரி விலக்கு 2035 ஆம் ஆண்டு வரை அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது; இதனுடன் முக்கிய கனிமங்களை கையாள்வதற்குத் தேவையான மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கும் அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், சிவில், பயிற்சி மற்றும் பிற விமானங்களின் தயாரிப்புக்குத் தேவையான கருவிகள் மற்றும் பாகங்களுக்கும் சுங்க வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது, இது சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை விமானப் போக்குவரத்துத் துணைத் துறையை ஆதரிக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது; அதே நேரத்தில், விலங்கியல் பூங்காக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கான சுங்க வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, அவற்றின் இறக்குமதிக்கு 30% சுங்க வரி விதிக்கப்படும்.
ரயில்வே துறைக்கு ரூ.2.77 லட்சம் கோடி – சாதனை ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ.2,77,380 கோடி என்ற முன்னெப்போதும் இல்லாத மூலதனச் செலவீன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது கடந்த ஆண்டின் ரூ.2,52,000 கோடி ஒதுக்கீட்டைவிட 10.25% அதிகம் ஆகும், மேலும் ரயில்வே துறையின் மொத்த வருவாய் ரூ.3,85,733.33 கோடியாகவும், செலவு ரூ.3,82,186.01 கோடியாகவும், மீதம் ரூ.3,547.32 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது; மொத்த ஒதுக்கீட்டில் புதிய தண்டவாளங்கள் அமைக்க ரூ.36,721.55 கோடி, தண்டவாள இரட்டைப்படுத்தும் பணிகளுக்கு ரூ.4,600 கோடி, மற்றும் இரண்டாவது வழித் தடங்கள் அமைத்தல், இஞ்ஜின்கள் மற்றும் பெட்டிகள் கொள்முதல் ஆகியவற்றுக்கு ரூ.37,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கும் அறிவிப்பில் சென்னை–பெங்களூரு, புனே–மைசூர், வைசாக்–புனே, வைசாக்–சென்னை, டெல்லி–வாரணாசி, வாரணாசி–சிலிகுரி ஆகிய பாதைகள் இடம்பெற்றுள்ளதுடன், சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முதல் மத்திய பட்ஜெட் 2026–27
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026–27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப். 1 அன்று புது தில்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்; அவரது பட்ஜெட் உரை 85 நிமிடங்கள் நீடித்ததுடன், இது அவர் தொடர்ச்சியாக 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிகழ்வாகும், மேலும் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு பங்குச் சந்தை முதலீடு அனுமதி
பிப். 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பங்கு முதலீட்டுத் திட்டத்தின் (Portfolio Investment Scheme) கீழ் இந்திய பங்குச் சந்தைகளில் இந்திய நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; இதன் கீழ் முன்னர் 5% ஆக இருந்த முதலீட்டு வரம்பு 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீட்டு வரம்பு 10% இலிருந்து 24% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த முதலீடுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கிய வங்கிகளில் கணக்குத் தொடங்குவதன் மூலம் மேற்கொள்ளலாம்.
பொருளாதாரச் செய்திகள்
ஜனவரி 2026-ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி
ஜனவரி 2026 மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.93 லட்சம் கோடியாக பதிவாகி, ஜனவரி 2025-இன் ரூ.1.82 லட்சம் கோடியை விட 6.2% அதிகரிப்பு காணப்பட்டுள்ளது; மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி 4.8% உயர்வு ஏற்பட்டுள்ளதுடன், சரக்கு இறக்குமதியிலிருந்து கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.52,253 கோடியாக இருந்து 10.1% அதிகரித்துள்ளது; இதே மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியாக இருந்து 7.6% உயர்வு கண்டுள்ள நிலையில், திருப்பி அளிக்கப்பட்ட தொகை 3.1% குறைந்து ரூ.22,665 கோடியாக பதிவாகியுள்ளது, மேலும் செஸ் வரி வருவாய் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.13,009 கோடியாக இருந்தது, ஆனால் நடப்பு ஆண்டு ஜனவரியில் ரூ.5,786 கோடியாக குறைந்துள்ளது.
வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-02-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-02-2026
சமகால இணைப்புகள்
Sun Mar 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-03-2026
Sat Mar 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026
Fri Mar 27 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
Thu Mar 26 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-03-2026
Sat Mar 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-03-2026
Thu Mar 19 2026