TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-06-2025
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-06-2025
சுற்றுச்சூழல் செய்திகள்
நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து சூரிய சக்தி திறன்
இந்திய நாடானது, செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் திறனை மிகவும் அதிகளவில் கொண்ட உலகின் நான்காவது நாடாக உள்ளது. 63 பயன்படுத்தப்படாத சுரங்கத் தளங்கள் ஒரு சேர சுமார் 27.11 ஜிகாவாட் (GW) சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும். இது நாட்டின் தற்போதைய நிறுவப்பட்ட சூரிய சக்தி திறனில் சுமார் 37 சதவீதத்திற்குச் சமமாகும். தெலுங்கானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை மூடப்பட்ட அல்லது விரைவில் மூடப்படவுள்ள சுரங்கங்களில் இருந்து அதிக நிலம் கிடைக்கப்பெறும் வாய்ப்புடன் கூடிய முதல் 20 உலகளாவியப் பிராந்தியங்களில் அடங்கும். மற்ற 3 முன்னணி நாடுகளானது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.
தமிழ்நாட்டில் டூம்ஸ்டே மீன் (துடுப்பு மீன்)
ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் தீங்கின் ஒரு அறிகுறியாக ‘டூம்ஸ்டே மீன்’ என்று குறிப்பிடப்படும் ஓர் அரிய வகை துடுப்பு மீன் ஆனது (ஓர்ஃபிஷ்) சமீபத்தில் தமிழகக் கடற்கரையில் பிடிபட்டது. தமிழ்நாட்டில் பிடிக்கப்பட்ட இந்த உயிரினம் ஆனது ஒரு பெரிய ஓர்ஃபிஷ் (ரெகலெகுஸ் க்லெஸ்னே) ஆகும். இது சுமார் 36 அடி (11 மீட்டர்) வரை நீளம் வரை வளரக் கூடிய உலகின் மிக நீளமான எலும்புகளையுடைய மீன் ஆகும். அவை மிகப் பொதுவாக கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 660 முதல் 3,300 அடி ஆழம் வரையிலான இடை (மீசோபெலஜிக்) மண்டலத்தில் வாழ்கின்றன. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த ஓர்ஃபிஷ் மீன்கள் ‘ரியுகு நோ சுகாய்’, அதாவது ‘கடல் கடவுளின் தூதர்’ என்று அழைக்கப்படுகின்றன.
தேசியச் செய்திகள்
பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தகவல் மையம்
மத்திய அரசானது, ‘பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தகவல் மையம்’ என்ற பெயரில் ஒரு வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் சுமார் 0.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த 11 ஆண்டுகளில், நான்கரை மடங்கு அதிகரித்து 2025-26 ஆம் ஆண்டில் 4.49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன. இந்த மையம் ஆனது பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான செயல்முறைகள் தொடர்பான அனைத்து தகவல்களின் எண்ணிமக் களஞ்சியமாகும்.
2025 ஆம் ஆண்டு இடைத்தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்படும் முக்கியப் படைப்பாக்கங்கள்
குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நிறைவேறின. இதில் மிகவும் முதன்முறையாக, அனைத்து வாக்குச் சாவடிகளின் நுழைவாயிலிலும் வாக்காளர்களுக்கு தங்களது கைபேசிகளைப் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்துச் செல்லும் வசதிகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ECINET செயலியைப் பயன்படுத்தி, தலைமை அதிகாரிகள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை வாக்குப்பதிவுத் தரவை நேரடியாக உள்ளிட வழி வகை செய்யப்பட்டது. முதல் முறையாக, சுமார் 100% வாக்குச் சாவடிகளில் இணையதள ஒளிபரப்பு நடத்தப்பட்டது. ஐந்து தொகுதிகளில் ஒரு வாக்குச் சாவடி 24 மணி நேரமும் இணையதள ஒளிபரப்புக் கண்காணிப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு மறுமதிப்பீட்டுத் திருத்தம் (SSR) நடத்தப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலைகள் வளங்காப்பு திட்டத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு
இந்தியா தனது முதலைகள் வளங்காப்பு திட்டத்தினை 1975 ஆம் ஆண்டில் தொடங்கியிருந்தது. இந்தியாவானது இந்த திட்டத்தினை ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்காவில் UNDP மற்றும் FAO ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கியது. இந்த முன்னெடுப்பானது தொடங்கி 50 ஆம் ஆண்டு நிறைவேற்றத் இந்த ஆண்டு குறிக்கிறது. இந்தியாவில் கங்கை நீர் முதலை (கரியல்), உப்பு நீர் முதலை மற்றும் சதுப்பு நில முதலைகள் ஆகிய மூன்று முக்கிய வகை முதலை இனங்கள் காணப்படுகின்றன. மூன்று உள்நாட்டு முதலை இனங்களைக் கொண்டுள்ள ஒரே இந்திய மாநிலம் ஒடிசா ஆகும். உலகளாவிய கங்கை நீர் முதலை எண்ணிக்கையில் சுமார் 80% இந்தியாவில் உள்ளது.
மாநிலச் செய்திகள்
NFWPIS உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MoA&FW) ஆனது, ‘Agri Stack தளம்: Turning Data into Delivery’ குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. மகாராஷ்டிரா, கேரளா, பீகார் மற்றும் ஒடிசாவுடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், தேசிய விவசாயிகள் நலத் திட்ட அமலாக்கச் சங்கத்துடன் பொதுத்துறை வங்கிகள் கூட்டணியும் இந்த நிகழ்வில் கையெழுத்தாயின. விவசாயிகள் பதிவேடுடன் இணைக்கப்பட்ட அங்கீகாரம் மூலம் கடன் சேவைகளுக்கு தடையற்ற எண்ணிம அணுகலைச் செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகள் 2025
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை ‘பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகளின் பட்டியல்: கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை குறித்த FAO-WFP முன்எச்சரிக்கை’ என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளன. சூடான், தெற்கு சூடான் மற்றும் மாலி ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் அதிக கவலைக்கு உரிய வகையில் பட்டினி நிலை அதிகம் உள்ள உலகின் ஐந்து இடங்கள் ஆகும். அதற்கு மிக எதிர்மாறாக, எத்தியோப்பியா, கென்யா, லெபனான், லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜர், சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை இனி பட்டினி நிலை அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியலில் இல்லை.
சர்வதேசச் செய்திகள்
அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோக நோய் மேலாண்மை வழிகாட்டுதல்கள்
கர்ப்பக் காலத்தில் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோக நோயை (SCD) மேலாண்மை செய்வதற்கான அதன் முதல் உலகளாவிய வழிகாட்டுதலை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதலில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து ஊட்ட நிரப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் உள்ளன. SCD பாதிப்பு உள்ள பெண்கள், பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பிற்கான வாய்ப்பு இல்லாதவர்களை விட சுமார் 4 முதல் 11 மடங்கு அதிகமான அளவிற்கு ஆபத்தினைச் சந்திக்கின்றனர். அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோக நோய் என்பது ஒரு மரபணு வழி இரத்தக் கோளாறு ஆகும். இது இரத்தச் சிவப்பணுக்களை மிகவும் இறுக்கமாக்கி அரிவாள் வடிவத்திலானதாக வடிவமைக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
மீநிலை ஹீலியம் நட்சத்திரம் - A980
பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) அறிவியலாளர்கள், நட்சத்திரத்தில் மீநிலை ஹீலியம் - A980 இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர். இத்தொலைதூர நட்சத்திரம் A980 ஆனது, ஓபியுச்சுஸ் விண்மீன் திரளில் தோராயமாக 25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இது ஹைட்ரஜன் குறைபாடுள்ள கார்பன் (HdC) நட்சத்திரம் என்று நம்பப்பட்டது. இந்த மர்மமான வானியல் அமைப்பானது தற்போது மீநிலை ஹீலியம் (EHe) கொண்ட நட்சத்திரமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை நட்சத்திரத்தில் இதற்கு முன்பு கண்டறியப்படாத, அயனியாக்கம் செய்யப்பட்ட ஒற்றை ஜெர்மானியம் (Ge II) என்ற ஓர் அரிய உலோகத் தனிமம் இருக்கச் செய்வதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டறிந்தனர். இது ஒரு EHe நட்சத்திரத்தில் ஜெர்மானியம் இருப்பது உறுதி செய்யப்பட்ட முதலாவது கண்டறிதல் ஆகும்.
முக்கிய தினங்கள்
போதைப் பொருள்களின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 2025 - ஜூன் 26
டிசம்பர் 7, 1987 அன்று, ஐநா பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது. உலகம் முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். 2025 - ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘Break the Cycle. #StopOrganizedCrime’ என்பதாகும்.
உலக குளிர்பதன தினம் 2025
உலக குளிர்பதன தினம் 2025 - ஜூன் 26. அன்றாட வாழ்வில் குளிர்பதன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும், குளிர்பதன மற்றும் காற்றுப் பதனத் துறையின் ஒரு முக்கியத்துவத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 1824 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று பிறந்த கெல்வின் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Cool Skills’ என்பதாகும்.
சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் 2025
சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் 2025 - ஜூன் 26. 1987 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. தற்போது, இந்த உடன்படிக்கையில் 174 நாடுகள் பங்கு தாரரக உள்ளன. 2002 ஆம் ஆண்டில், சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கான நாடுகளின் ஒரு விருப்பத் தேர்வு சார்ந்த கூடுதல் நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Torture: a crime against humanity’ என்பது ஆகும்.
தமிழ்நாடு
RBI புதிய கட்டணம் ஒழுங்குமுறை வாரியத்தை ( PRB) அமைத்தது
® இந்திய ரிசர்வ் வங்கி ( RBI), இந்தியாவில் கட்டண முறைகளைக் கண்காணிக்க மற்றும் ஒழுங்குபடுத்த ஒரு புதிய கட்டணம் ஒழுங்குமுறை வாரியத்தை ( PRB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . ® PRB, முன்பு இருந்த கட்டணம் மற்றும் தீர்வு முறைகளுக்கான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை வாரியத்தை ( BPSS) மாற்றுகிறது . ® ஆறு உறுப்பினர்களைக் கொண்ட PRB- க்கு RBI கவர்னர் தலைமை வகிப்பார் . ® முதல் முறையாக , மத்திய அரசின் மூன்று பரிந்துரையாளர்கள் இந்த வாரியத்தில் இடம் பெறுகின்றனர் . இது அரசின் அதிக பங்களிப்பை காட்டுகிறது . PRB- இன் அமைப்பு : ® RBI கவர்னர் ( தலைவர் ) ® துணை கவர்னர் ® நியமிக்கப்பட்ட RBI அதிகாரி ( இயல்பு பதவி ) ® கட்டணம் மற்றும் தீர்வு முறைகளுக்கான பொறுப்பு துணை கவர்னர் ® RBI- இன் மத்திய வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஒரு RBI அதிகாரி ® மூன்று அரசு பரிந்துரையாளர்கள்
RBI 2025- இல் தங்க கடன் ஒழுங்குமுறைக்கான புதிய விதிமுறைகளை முன்மொழிந்தது
® இந்திய ரிசர்வ் வங்கி ( RBI), வங்கிகள் மற்றும் NBFC- களால் தங்க கடன்களை தரப்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது . முக்கிய விதிமுறைகள் : ® கடன் - முதல் - மதிப்பு ( LTV) விகிதம் 75% வரை ( தற்போதுள்ள 80%- இலிருந்து குறைக்கப்பட்டது ). ® கடனாளிகள் , உரிமையாளர் சான்றிதழ் அல்லது வாங்கிய சீட்டு இல்லாவிட்டால் ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும் . ® கடன் வழங்குபவர்கள் , தங்கத்தின் தூய்மை , எடை , கழிவுகள் , படம் மற்றும் மதிப்பீட்டை விவரிக்கும் சான்றிதழை வழங்க வேண்டும் . கடன்கள் வழங்கப்படும் பொருட்கள் : ® 22 காரட் அல்லது அதற்கு மேல் தூய்மை கொண்ட தங்க நகைகள் , ஆபரணங்கள் மற்றும் வங்கி விற்பனை செய்த தங்க நாணயங்கள் . ® குறைந்தது 925 தூய்மை கொண்ட வெள்ளி நகைகள் , ஆபரணங்கள் மற்றும் வங்கி விற்பனை செய்த வெள்ளி நாணயங்கள் . ® ஒரு கடனாளிக்கு 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை கடன் வழங்கப்படும் . ® இந்த நடவடிக்கைகள் , தங்க கடன் சந்தையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் , ஆபத்துகளைக் குறைக்கவும் நோக்கம் கொண்டவை .
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் 2025: முதல் பதிப்பு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியூவில் நடைபெற்றது
® முதல் முறையாக கெலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் , தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியூவில் நடைபெற்றது . ® மல்லாக்கம்பம் மற்றும் கயிறு இழுத்தல் , பதக்கம் இல்லாத ஆர்ப்பாட்ட விளையாட்டுகளாக இடம்பெற்றன . ® கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற முதல் கடற்கரை விளையாட்டுகள் இதுவாகும் . ® மணிப்பூர் முதலிடத்தில் இருந்தது , மகாராஷ்டிரா இரண்டாவது மற்றும் நாகாலாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தன .
2025- இல் இந்தியா உலகின் 4- வது பெரிய பொருளாதாரமாகும் : IMF
® IMF- இன் உலக பொருளாதார அவுட்லுக் ( ஏப்ரல் 2025) படி , 2025–26 நிதியாண்டின் இறுதியில் இந்தியா உலகின் 4- வது பெரிய பொருளாதாரமாக மாறும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது . ® அமெரிக்கா , சீனா மற்றும் ஜெர்மனிக்கு பின்னால் இந்தியா இருக்கும் . ஜப்பான் மற்றும் UK போன்ற பொருளாதாரங்களை முந்தும் . ® இந்தியா ஏற்கனவே UK- ஐ முந்தி 5- வது பெரிய பொருளாதாரமாக இருந்தது . ® 2014 மற்றும் 2025 க்கு இடையே , இந்தியாவின் பெயரளவு GDP இரட்டிப்பாக ( 105% வளர்ச்சி ) கணிக்கப்பட்டுள்ளது . ® 2025- இல் , இந்தியா $4 டிரில்லியன் பொருளாதார மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-06-2025
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25-06-2025
சமகால இணைப்புகள்
Sun Mar 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-03-2026
Sat Mar 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026
Fri Mar 27 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
Thu Mar 26 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-03-2026
Sat Mar 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-03-2026
Thu Mar 19 2026