TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23-06-2025

Trending TNPSC

By

6 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23-06-2025

அறிவியல் கண்டுபிடிப்பு

அறிவியல் கண்டுபிடிப்பு

அசாம் மாநிலத்தில் மகம் என்ற நிலக்கரிச் சுரங்கத்தின் நிலக்கரிச் படுக்கைகளில் 24 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான இலைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அவை நோத்தோபீஜியா என்ற வகை தாவர இனத்தின் உலகின் பழமையான பதிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதைபடிவமான இலைகள் என்பவை பிற்கால ஒலிகோசீன் சகாப்தத்திற்கு (24–23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) முந்தையவையாகும். அவை இன்று மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நவீன நோத்தோபீஜியா இனங்களுடன் ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

விமான போக்குவரத்து செய்திகள்

விமான போக்குவரத்து செய்திகள்

ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிறுவன விருதுகளின் படி 2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த மற்றும் குறைந்த கட்டணத்திலான விமான சேவை நிறுவனங்களில் இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பிராந்திய ரீதியாக, 2025 ஆம் ஆண்டிற்கான தென்கிழக்காசியாவின் சிறந்த விமான நிறுவனம் மற்றும் மிகவும் குறைந்த அளவு கட்டணத்திலான ஒரு விமான நிறுவனம் ஆகியவற்றுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விமான போக்குவரத்து செய்திகள்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சிறந்த ஒரு விமான நிறுவனமாக அறிவிக்கப் பட்டதோடு ஒன்பதாவது முறையாக மீண்டும் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளது. ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிறுவன விருதுகள் ஆனது, ‘விமானப் போக்குவரத்துத் துறையின் ஆஸ்கார் விருதுகள்’ என்று பரவலாகக் கருதப்படுகின்றன.

சர்வதேச அனுசரிப்பு

சர்வதேச அனுசரிப்பு

சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினம் 2025 - ஜூன் 16 இல் அனுசரிக்கப்பட்டது. இந்தத் தினமானது வீட்டுப் பணியாளர்கள் உடன்படிக்கை, 2011 என்பது (எண். 189) ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆண்டு நிறைவை குறிக்கிறது. உலகெங்கிலும், சுமார் 75 மில்லியனுக்கும் அதிக அளவில் வீட்டுப் பணிப் பெண்கள் வீடுகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் கட்டமைப்பில் ஆதரவை வழங்கி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Recognizing Care, Advancing Dignity and Rights for the Domestic Workers’ என்பதாகும்.

வனவிலங்கு பாதுகாப்பு

வனவிலங்கு பாதுகாப்பு

உலக முதலைகள் தினம் 2025 - ஜூன் 17 இல் அனுசரிக்கப்பட்டது. முதலைகள் மற்றும் முதலைகளின் வளங்காப்பு குறித்த ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த ஒரு நிகழ்வு ஆனது, இந்தியாவின் முதலை வளங்காப்பு திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்தது. 3 முக்கிய வகை முதலைகள் இந்தியாவில் காணப்படுகின்றன - உப்பு நீர் முதலை, சதுப்பு நில வாழ் முதலை, மற்றும் கங்கை நீர் முதலை - கரியல். மூன்று உள்நாட்டு முதலை இனங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஒடிசாவாகும்.

மருத்துவ ஆராய்ச்சி

மருத்துவ ஆராய்ச்சி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) புனேவில் உள்ள அதன் தேசிய நச்சுயிரியியல் கல்வி நிறுவனத்தில் (NIV) அதன் முதல் அதிஉயர் செயல்திறன் கொண்ட கணினி மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு NAKSHATRA என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப் பட்ட தரவுச் சேமிப்பைச் செயல்படுத்தி, மரபணு ஆராய்ச்சிக்கான பாதையை மேம்படுத்துகிறது. இது சிறந்த வைரஸ் மரபணு கண்காணிப்புத் திறன் மற்றும் எதிர்காலத்தில் தோன்ற உள்ள எந்தவொரு தொற்றுநோய்க்குமான தேசியத் தயார்நிலையை உறுதி செய்யும்.

தொழில்நுட்ப செய்திகள்

தொழில்நுட்ப செய்திகள்

இந்திய தேசிய இணைய பரிமாற்ற (NIXI) நிறுவனமானது, சமீபத்தில் அதன் 20 ஆம் ஆண்டு ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது. 2003 ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் இது அமைக்கப்பட்டது. இது தற்போது நாடு முழுவதும் சுமார் 77 இணையதளப் பரிமாற்ற மையங்களை (IXPs) இயக்குகிறது. இது தாமதத்தைக் குறைத்தல், வேகத்தை மேலும் அதிகரித்தல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளை இந்தியாவின் எல்லைகளுக்குள் மேற்கொள்ள உதவுகிறது.

சுகாதார விழிப்புணர்வு

சுகாதார விழிப்புணர்வு

ASEAN டெங்கு தினம் 2025 - ஜூன் 15 இல் அனுசரிக்கப்பட்டது. இந்த தினமானது 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10வது ASEAN சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘ASEAN United: Zero dengue deaths a future we build together’ என்பதாகும். டெங்கு வைரஸ் ஆனது முதன்மையாகப் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

முக்கிய தினங்கள்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சேவை தினம் 2025 - ஜூன் 23

டிசம்பர் 20, 2002 அன்று ஐநா பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையானது 2003 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சேவை விருதுகள் (UNPSA) திட்டத்தையும் நிறுவியது. உலகெங்கிலும் உள்ள குடிமக்களின் வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் பொது/அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறையின் முக்கியப் பங்களிப்புகளை இது கௌரவிக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சேவை மன்றம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் கருத்துரு ‘Five Years to 2030: Accelerating Public Service Delivery for a Sustainable Future’ என்பதாகும்.

தமிழ்நாடு

டெல்லியில் மின் - பூஜ்ய எஃப்ஐஆர் திட்டம் தொடக்கம்

® இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் ( I4C) டெல்லியில் மின் - பூஜ்ய எஃப்ஐஆர் திட்டத்தை பைலட் முறையில் தொடங்கியுள்ளது . ® 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நடைபெறும் நிதி சார்ந்த சைபர் மோசடிகளை சமாளிப்பதே நோக்கம் . செயல்பாட்டு முறை : ® 1930 ஹெல்ப்லைன் அல்லது cybercrime.gov.in வழியாக வரும் புகார்களை தானாக பூஜ்ய எஃப்ஐஆராக மாற்றுகிறது ® உடனடியாக தொடர்புடைய சைபர் குற்றம் பொறுப்பு காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது புகாரளிப்பவர்கள் : ® 3 நாட்களுக்குள் காவல் நிலையம் சென்று வழக்கமான எஃப்ஐஆராக மாற்ற வேண்டும் ® டெல்லி மின் - குற்றம் காவல் நிலையம் இந்த மின் - எஃப்ஐஆர்களை பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளது .

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழா 2025 இல் சிறந்த ஆவணப்பட விருது

® பஹார் தத் மற்றும் விஜய் பேடி இயக்கிய ‘ சேவிங் தி பீமநாமா : ஆயுஷி ஜெயின் அண்ட் எ ஜெயண்ட் டர்டில் ’ என்ற ஆவணப்படம் , 15 வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழா 2025 இல் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்றது . ® இந்தியாவில் ஒரு பெரிய ஆமை இனத்திற்கான பாதுகாப்பு முயற்சிகளை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது .

பானு முஷ்டாக்கின் ’ ஹார்ட் லாம்ப் ’ என்ற நாவல் சர்வதேச புக்கர் பரிசை வென்றது

® கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் ’ ஹார்ட் லாம்ப் ’ என்ற புத்தகத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றார் . ® இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தீபா பாஸ்தி . ® கன்னட மொழிக்கான முதல் சர்வதேச புக்கர் பரிசு இதுவாகும் . ® ஒரு சிறுகதை தொகுப்பு பரிசை வென்றது இதுவே முதல் முறை . ® குறுகிய பட்டியலில் பிரெஞ்சு , இத்தாலியன் , டேனிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் படைப்புகள் இடம்பெற்றுள்ளன . ® யு ஆர் அனந்தமூர்த்தி ( 2013) க்குப் பிறகு கன்னட எழுத்தாளர் ஒருவர் புக்கர் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படுவது இது இரண்டாவது முறை . ® தீபா பாஸ்தி சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் ஆனார் . ® பாஸ்தி இதற்கு முன்பு 2024 இல் இதே படைப்பிற்காக ஆங்கில PEN இன் ‘PEN மொழிபெயர்ப்புகள் ’ விருதை வென்றிருந்தார் . ® கடைசியாக இந்திய வெற்றியாளர் கீதாஞ்சலி ஸ்ரீ ( 2022) ஆவார் , இது இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது . ® அருந்ததி ராய் 1997 ஆம் ஆண்டு தனது ” தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் ” நாவலுக்காக மேன் புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மற்றும் முதல் இந்தியப் பெண்மணி ஆனார் .

மே 21 அன்று உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது

® மே 21 ஆண்டுதோறும் உரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான உலக கலாச்சார பன்முகத்தன்மை தினமாகக் கொண்டாடப்படுகிறது . ® உலகளவில் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது .

வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24-06-2025

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-06-2025

சமகால இணைப்புகள்