TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20-06-2025
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20-06-2025
சர்வதேசச் செய்திகள்
பராக் மேகன் vs ஃபட்டா I எறிகணை
ஈரானின் ஃபட்டா- 1 எறிகணை தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது புதிய வான்வழி பாதுகாப்பு அமைப்பான ‘பராக் மேகன்’ அல்லது ‘Lightning Shield-மின்னல் கவசத்தை’ முதன்முறையாக செயல்படுத்தியது. இது பராக் MX எறிகணை பாதுகாப்பு அமைப்பின் சிறப்பு வடிவமாகும். இது ஆளில்லா விமானங்கள், கப்பல் எறிகணைகள் மற்றும் உந்துவிசை எறிகணைகள் போன்ற பல்வேறு வான்வழியான அச்சுறுத்தல்களிலிருந்து கடற்படைக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஃபட்டா-1 என்பது ஒரு நடுத்தர தூர தாக்குதல் வரம்புடைய அதி மீவொலி உந்துவிசை எறிகணையாகும். இந்த எறிகணையானது, மேக் 13 மற்றும் 15 ஆகிய வரம்பிற்கு இடையில் சுமார் 15,000 கிமீ/மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
113 வது சர்வதேச தொழிலாளர் மாநாடு
இந்த மாநாடு ஆனது, தொழிலாளர்களை உயிரியல் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முதல் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இது பணிச்சூழலில் உயிரியல்சார் ஆபத்துகளை சிறப்பு கவனம் கொண்டு நிவர்த்தி செய்யும் முதல் சர்வதேச செயற்கருவியாகும். இந்த உடன்படிக்கை (C192) ஆனது அதன் உறுப்பினர் நாடுகள் ஆனது, தேசிய அளவில் கொள்கைகளை வகுத்து தொழில் துறைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. இந்த நிகழ்வின் போது 2006 ஆம் ஆண்டு கடல்சார் தொழிலாளர் உடன்படிக்கைக்கான ஏழு திருத்தங்களும் அங்கீகரிக்கப்பட்டன.
மாநிலச் செய்திகள்
தான்யா.M மற்றும் கேரள மாநிலம் மற்றும் பிற அரசுகளுக்கு இடையிலான ஒரு வழக்கு
குற்றவியல் வழக்குத் தொடர்லுக்கு மாற்றாகவோ அல்லது பிணை உத்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவோ தடுப்புக் காவலின் மிகவும் அசாதாரணமான நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. S.K. நஸ்ரீன் மற்றும் தெலுங்கானா மாநில அரசு (2023) மற்றும் வேனாவத் புஜ்ஜி மற்றும் திர் தெலுங்கானா மாநில அரசு (2024) ஆகிய வழக்குகளை மேற்கோள் காட்டி, ‘பொது ஒழுங்கு’ மற்றும் ‘சட்ட ஒழுங்கு’ ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. 2007 ஆம் ஆண்டு கேரள மாநிலச் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தல்லிகி வந்தனம் - ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, ‘தல்லிகி வந்தனம்’ என்ற புதிய நலத்திட்டத்தைத் தொடங்கி யுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவரின் தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஒவ்வோர் ஆண்டும் 15,000 ரூபாய் வழங்கப்படும். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். அரசாங்கம் இதனை ‘அனைத்து நலத்திட்டங்களின் தாய்’ என்று அழைக்கிறது.
இந்தியாவின் முதல் கைபேசி அடிப்படையிலான இணைய வாக்களிப்பு முறை – பீகார்
பீகார் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஒரு கை பேசியினைப் பயன்படுத்தி இணைய வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. வாக்களிப்புச் செயல்பாட்டில் இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்றுக் கொண்ட நாட்டின் முதல் மாநிலமாக பீகார் விளங்கும். ஒட்டு மொத்த இணைய வாக்களிப்புச் செயல்முறையும் ‘e-Voting SECBHR’ எனப்படும் கை பேசி செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும். புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், கர்ப்பிணிப் பெண் வாக்காளர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் மற்றும் கடுமையான நோய் வாய்ப்பட்ட வாக்காளர்கள் இணைய வழி வாக்குப்பதிவுச் செயல்முறையைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
உத்கல் கேசரி பரிதா வழக்கு – 2013
முன்னாள் முதலமைச்சரும், போடினாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான O. பன்னீர் செல்வத்திற்கு எதிராகப் போடினாயக்கனூர் வாக்காளர் தாக்கல் செய்த மனுவை சபாநாயகர் M. அப்பாவு விசாரிக்க உள்ளார். இது ஒடிசா சட்டமன்றச் சபாநாயகர் மற்றும் உத்கல் கேசரி பரிதா இடையிலான 2013 ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த நிலைப்பாடு ஆனது தகுதி நீக்கம் தொடர்பான 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்கு இணங்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் ஆனது கடைசியாக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது.
ஜல் கங்கா சன்வர்தன் அபியான் முன்னெடுப்பு- மத்தியப் பிரதேசம்
ஜல் கங்கா சம்வர்தன் அபியான் எனும் பிரச்சாரம் ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஷிப்ரா நதிக்கரையில் தொடங்கப்பட்டது. இது அம்மாநிலத்தின் நீர்நிலை அமைப்புகளை (ஆறுகள், குளங்கள், கிணறுகள், படிக் கிணறுகள் மற்றும் பல) பாதுகாத்து மீட்டெடுப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டுப்பாடற்ற நிலத்தடி நீர் உறிஞ்சுதல் இந்த ஆறு மற்றும் இதர பிற சிறிய ஆறுகளை வறண்டு போகச் செய்து, வேளாண்மையினைப் பாதித்தது. ‘Ridge to Valley’ கொள்கையைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட சில நீர் வேங்காப்பு கட்டமைப்புகள் மூலம், 33 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நதி தற்போது மீண்டும் பாய்கிறது.
தமிழ்நாட்டுச் செய்திகள்
சிறுகடன் துறையில் நிலுவையில் உள்ள கடன்
தமிழ்நாட்டில் சிறுகடன் துறையில் ஒரு வங்கிக் கணக்கிற்கு மிக அதிகபட்சச் சராசரி நிலுவைக் கடன் உள்ளது. முதலிடத்தில் உள்ள 10 மாநிலங்களுள், தமிழ்நாட்டில் ஒரு வங்கிக் கணக்கிற்கு அதிகபட்சமாக 31,131 ரூபாய் என்ற நிலுவைக் கடன் உடன் அதிகபட்ச நிலுவைக் கடனைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வங்கிக் கணக்கிற்கு அதிகபட்சமாக 30,488 ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் சிறு கடன் துறையின் மொத்த நிலுவைக் கடன் (GLP) ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 46,689 கோடி ரூபாயாக இருந்தது.
G.M. அக்பர் அலி குழு
தமிழக மாநில அரசானது நீதிபதி (ஓய்வு) G.M. அக்பர் அலி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இது ஆட்சேர்ப்பு/தேர்வுச் செயல்முறையின் மீதான அதன் தீர்ப்பின் ஒரு தாக்கத்தை ஆராய்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளை முன்மொழியும். பாரம்பரியமாக, மாநில அரசானது 200 அங்க (இட ஒதுக்கீடு) தேர்வுப் பட்டியல் என்ற முறையைப் பின்பற்றி, அதன் மூலம் அரசு நியமனங்களுக்கான அதன் தரவரிசைப் பட்டியல்களைத் தயாரித்து வந்தது.
தேசியச் செய்திகள்
தொலைத்தொடர்பு சார் புத்தொழில் நிறுவனங்களுக்கான சமர்த் திட்டம்
தகவல் தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) ஆனது ‘சமர்த்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கான ஓர் அதிநவீன தொழிற்காப்புத் திட்டமாகும். முதல் கட்டத்தில் 18 புத்தொழில் நிறுவனங்கள் போட்டிச் செயல்முறை மூலம் முதல் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தொழில் நிறுவனங்களுக்கு என நிதி மானியம், முழுமையான வசதிகள் பொருத்தப்பட்ட அலுவலக இடம் மற்றும் டெல்லி மற்றும் பெங்களூரு வளாகங்களில் C-DOT மையத்தின் பல்வேறு ஆய்வக வசதிகளுக்கான அணுகல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
தார்த்தி ஆபா ஜன்பாகிதாரி அபியான் 2025
இந்திய அரசானது, தார்த்தி ஆபா ஜன்பாகிதாரி அபியான் எனும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரம் ஆனது, பழங்குடியினர் அதிகம் காணப்படும் 549 மாவட்டங்களிலும், சுமார் 100,000+ கிராமங்கள் மற்றும் வாழ்விடங்களை உள்ளடக்கிய எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்கள் (PVTG) அதிகம் வாழும் 207 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இது ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மிகப்பெரியப் பழங்குடியின அதிகாரமளிப்புப் பிரச்சாரம் ஆகும்.
சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியின் முதல் கூட்டம்
சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியின் (IBCA) முதல் கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் 2023 ஆம் ஆண்டு மைசூரில், புலிகள் வேங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் IBCA கூட்டணிக் குறித்து அறிவித்தார். இந்திய அரசு ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேசியப் புலிகள் வேங்காப்பு ஆணையத்தின் மூலம் இந்தக் கூட்டணியினை நிறுவியது. IBCA என்பது ஏழு பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பினைக் கொண்ட 95 புலிகள் வாழ்விடம் கொண்ட நாடுகளின் கூட்டணியாகும்.
திருத்தப்பட்ட திட்ட ஆணம் - பசுமை இந்தியா திட்டம்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது 2021 - 2030 ஆம் காலக் கட்டத்திற்கான திருத்தப்பட்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட திட்ட ஆவணத்தில், அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலிருந்தும் இந்தியா 3.39 பில்லியன் டன் கார்பன் (உறிஞ்சுப் பகுதி) பிடிப்பினை அடைய முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மதிப்பிடப்பட்ட சுமார் 24.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். கூடுதல் காடு மற்றும் மரங்களின் பரவல் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான கூடுதல் கார்பன் பிடிப்பினை உருவாக்குவதே தேசியப் பசுமை இந்தியா திட்டத்தின் நோக்கமாகும்.
பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்
இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் அறிவியலாளர் / விஞ்ஞானி நெல்லை சு.முத்து சமீபத்தில் காலமானார். அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூத்த அறிவியலாளராகப் பணியாற்றினார். அவர் மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர்கள் சங்கத்தினால் வழங்கப்படும் கவி மாமணி விருதைப் பெற்றவர் ஆவார். அறிவியல், குழந்தைகள் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு போன்ற சில தலைப்புகளில் 70க்கும் மேற்பட்டப் புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது நான்கு புத்தகங்களுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புத்தக விருது மற்றும் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. அவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் பணி ஆற்றினார்.
சுற்றுச்சூழல் செய்திகள்
ஸ்பார்டீயஸ் மற்றும் சொனாய்டா
தென்னிந்தியாவில் ஸ்பார்டேயினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய வகை குதிக்கும் சிலந்திகளை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை அவற்றினுடைய திறமை மிக்க வேட்டைத் திறன்கள் மற்றும் வலையமைத்துத் தாக்கும் உத்திகளுக்குப் பெயர் பெற்றவையாகும். இந்தக் கண்டுபிடிப்பானது, முன்னதாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்ட இந்தப் பேரினங்கள் இந்தியாவில் மிக முதல் முறையாக கண்டறியப்பட்டதைக் குறிக்கின்றன. கூடுதலாக, ஆப்பிரிக்காவில் மட்டுமே இருப்பதாக முன்னர் கருதப்பட்ட இந்த Sonoita cf. lightfooti என்ற இனமும் கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் சில பிரதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன। இந்தக் கண்டுபிடிப்புகளுடன், இந்தியாவில் ஸ்பார்ட்டீனே துணைக் குடும்பத்தின் கீழான சிலந்தி இனங்களின் 10 பேரினங்களில் 15 இனங்களாக அதிகரித்துள்ளன.
தமிழ்நாடு
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தீர்ப்பு – சின்னங்கள் மற்றும் பெயர்கள் ( தவறான பயன்பாட்டைத் தடுப்பது ) சட்டம் , 1950
® மெட்ராஸ் உயர் நீதிமன்றம் , உடற்கட்டுக் கோப்பு வீரர்கள் போட்டிகளில் ” Mr. India” அல்லது ” Mr. South India” போன்ற பட்டங்களை வழங்குவது 1950- ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் ( தவறான பயன்பாட்டைத் தடுப்பது ) சட்டத்தை மீறுவதாக இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது . ® நீதிமன்றம் , தனியார் நபர்கள் / அமைப்புகள் இத்தகைய பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க மறுத்தது . ® சட்டத்தின் பிரிவு 3, மத்திய அரசின் முன்னனுமதி இல்லாமல் தேசியப் பெயர் அல்லது சின்னத்தை வணிகம் , தொழில் , வர்த்தக முத்திரைகள் , காப்புரிமைகள் அல்லது வடிவமைப்புகளில் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது . ® இந்தச் சட்டம் , அதன் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பெயர்கள் / சின்னங்கள் மற்றும் அவற்றின் நிறங்களால் பிரதிபலிக்கும் படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது
அரசியலமைப்புச் சட்டத்தை அனுமானிக்கும் கோட்பாட்டை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது
® குடியுரிமை ( திருத்தம் ) சட்டத்தை ( CAA ) அரசியலமைப்புச் சட்டமாக அறிவிக்கக் கோரும் மனு மீதான அவசர விசாரணையை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மறுத்துவிட்டது . ® வேறுவிதமாக நிரூபிக்கப்படாவிட்டால் , நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு சட்டமும் ” அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக ” இருக்கும் என்று அது கூறியது . ® இந்தச் சட்டக் கோட்பாடு , சட்டமன்றங்கள் அரசியலமைப்பு மதிப்புகளுடன் இணைந்த சட்டங்களை உருவாக்குகின்றன என்று கருதுகிறது . ® அரசியலமைப்பு மீறலுக்கான தெளிவான சான்றுகள் இல்லாவிட்டால் , நீதிமன்றங்கள் அவற்றின் செல்லுபடியாகும் என்ற அனுமானத்துடன் சட்டங்களை விளக்குகின்றன . ® NDMC vs பஞ்சாப் மாநிலம் ( 1996) வழக்கில் , மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த அனுமானத்தின் வரம்புகளைப் பற்றி விவாதித்தது . ® சட்டங்களை ரத்து செய்வதில் நீதித்துறை கட்டுப்பாட்டை இந்தக் கொள்கை ஆதரிக்கிறது , அரசியலமைப்பு மீறல்களை நிரூபிக்க மனுதாரர்கள் மீது பொறுப்பை வைக்கிறது .
புதுப்பிக்கப்பட்ட OCI இணையத்தளம் தொடங்கப்பட்டது
® OCI அட்டைதாரர்களுக்கான மின்னனு அணுகல் , பாதுகாப்பு மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வெளிநாட்டு இந்திய குடிமக்கள் ( OCI) இணையத்தளத் தை தொடங்கினார் . ® 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 7A இன் கீழ் ஆகஸ்ட் 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்ட OCI அட்டை , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களுக்கு ( PIOs) நீண்டகால வதிவிட சலுகைகளை வழங்குகிறது . ® தகுதி : ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்திய குடிமக்களாக இருந்தவர்கள் , அல்லது அத்தகைய நபர்களின் குழந்தைகள் / பேரக்குழந்தைகள் / கொள்ளுப் பேரக்குழந்தைகள் . இந்திய குடிமக்கள் அல்லது OCI வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் ( 2+ ஆண்டுகள் திருமணமானவர்கள் ) இதில் அடங்குவர் . ® தகுதியற்றவர்கள் : பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்துடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டவர்கள் , மற்றும் பணியாற்றும் / ஓய்வு பெற்ற வெளிநாட்டு ராணுவ வீரர்கள் .
நீதித்துறை சேவைக்கான 3 ஆண்டு சட்டப் பயிற்சித் தேவையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது
® தொடக்க நிலை நீதித்துறை சேவை ஆர்வலர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சட்டப் பயிற்சி கட்டாயமாக உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது . ® முதன்மை நீதித்துறை அதிகாரி அல்லது 10+ ஆண்டுகள் அனுபவம் உள்ள வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்ட சட்ட அனுபவச் சான்றிதழை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் . ® எந்தவொரு நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரியின் கீழும் சட்ட எழுத்தராக அனுபவம் மூன்று ஆண்டுத் தேவையில் கணக்கிடப்படும் . ® ஷெட்டி ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த விதி முன்னர் 2002 இல் நீக்கப்பட்டது . ® அரசியலமைப்பின் சரத்து 234 இன் கீழ் , மாநில நீதித்துறை சேவைகளுக்கான ( மாவட்ட நீதிபதிகள் தவிர ) நியமனங்கள் ஆளுநரால் செய்யப்படுகின்றன .
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-06-2025
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19-06-2025
சமகால இணைப்புகள்
Sun Mar 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-03-2026
Sat Mar 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026
Fri Mar 27 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
Thu Mar 26 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-03-2026
Sat Mar 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-03-2026
Thu Mar 19 2026